Saturday 30 October 2010

ஆரியப் பண்பாட்டைப் புகுத்திய பல்லவ மன்னர்கள்



தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே ஆரியப் பண்பாடு நுழைந்துவிட்டது என்றபோதிலும் ஜாதிமுறைஆரியத் திருமணமுறைஆரியர் கலை பரவிடவில்லை. ஆனால் ஏறத்தாழ கி.பி 250 லிருந்து கி.பி.900 வரை ஆட்சி செய்த பல்லவப்பேரரசர்கள் ஆரியப் பண்பாட்டின் கர்த்தாக்களாக விளங்கினர் என்பதற்குக் கல்வெட்டுகளும்செப்பேடுகளும் தகுந்த ஆதாரமாக விளங்குகின்றன.

பல்லவப் பேரரசின் தொடக்ககால மன்னர்கள் அளித்துக் கிடைத்துள்ள செப்பேடுகள் மூன்றுதான். அம்மூன்று செப்பேடுகளும்கூடத் தமிழில் எழுதப்பட்ட செப்பேடுகள் அல்ல. பிராகிருத மொழியில் அமைந்தவை. இதனாலேயே வரலாற்று ஆசிரியர்கள் இந்த முற்காலப் பல்லவர்களை முதல் பல்லவ மன்னர்களைப் பிராகிருதப் பல்லவர்கள் என்றழைக்கும் மரபு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பல்லவர்கள் அளித்த செப்பேடுகளுக்கு மயிதவோலுச் சேப்பேடுஹீரஹடஹள்ளிச் செப்பேடுகுணபதேயம் செப்பேடு ஆகும் மயிதவோலுச் செப்பேட்டையும்ஹீரஹடஹள்ளிச் செப்பேட்டையும் வழங்கியவர் பல்லவப் பேரரசரின் முதல்வராகக் கருதப்படும் சிம்மவர்மனின் மகன் சிவஸ்கந்தவர்மன்.

தனித்தமிழ்ப்பெயருடைய சேரசோழபாண்டியர்களுக்குப்பின் தமிழல்லாத வர்மன் (வர்மா) என்று முடியும் தமிழேயல்லாத பெயர் கொண்டவர்கள் இந்தப் பல்லவர்கள். நந்திவர்மன் என்பவன் பெயரில் மட்டும் நந்தி என்ற தமிழ்ச்சொல் இடம் பெற்றிருக்கும்.

நம் தமிழ் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகள் எல்லாம் தமிழ் மண்ணின் இடப் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் வேள்விக்குடிசின்னமனூர்கரந்தை எனக் காணலாம். இந்தப் பல்லவர் செப்பேடுகளில் ஊர் பெயரே மயிதவோலுஹீரஹடஹள்ளிமஞ்சிக்கல்லுகுணபதேயம் என்று எல்லாம் தமிழல்லாத ஊர்ப் பெயர்கள். பல்லவப் பேரரசின் முதல்வராகப் போற்றப்படும் சிம்மவர்களின் காலத்துப் பல்லவராட்சி ஆந்திரம்கருநாடகத்தின் ஒரு பகுதிதமிழ்நாட்டில் தொண்டமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கி அமைந்திருந்தது எனலாம்.
மயிதவோலுச் செப்பேடு
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த குண்டூர் மாவட்ட நாசராவ் பேட்டைக்குப் பன்னிரண்டு கல் கிழக்கில் உள்ள கிராமம் மயிதவோலு. அந்த ஊரில் கிடைத்ததாலேயே அப்பெயர். பல்லவ குலத்தின் முதற் செப்பேடு இது என்பர். மெல்லிய எட்டு ஏடுகள் கொண்ட தொகுதி இது. இவற்றை இணைத்திருக்கும் வளையத்தின் முகப்பில் நந்தியின் உருவம் உள்ளது. பிராகிருத மொழியில் இருபத்தெட்டு வரிகளில் அமைந்துள்ளது. இச்செப்பேட்டில் தமிழ் ஏதும் கிடையாது. கொண்டமுடிச் செப்பேடு எனப்படும் பிராகிருதச் செப்பேட்டின் எழுத்தை ஒத்துள்ளது.
பல்லவ மன்னவரான சிவஸ்கந்தவர்மன் இளவரசராக இருந்தபோது பிரம்மதேயமாக அதாவது பார்ப்பனனுக்கு தானமாக வழங்கிய தானத்தைப் பதிவு செய்திருக்கும் ஏடு இது. ஆம்! பார்ப்பானுக்குத்தான் தானம். அதற்குப் பெயர் பிரம்மதேயம். இம்மயிதவோலுச் செப்பேடு தான்யகேடம் எனும் இடத்து அரசு அலுவலருக்கு இத்தானம் குறித்து அளித்த ஆணையாகும்.

சிவஸ்கந்தவர்மன் யாருக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எதற்குக்   கொடுத்திருக்கிறான் பாருங்கள். தன்னுடைய வெற்றிக்குஅறம்ஆயுள்வலிமை ஆகியவை பெருகிடக் கொடுத்திருக்கிறான். அதற்காக ஆந்திரத்திலிருந்த விரிபுரம் எனும் ஊரைக் கொடுத்திருக்கிறான் அவ்வாறு கொடுத்தது பூர்வகோடி ஆர்யன் கோநந்தி ஆர்யன் என்ற இரண்டு பார்ப்பனர்களுக்கு. எப்போது கொடுத்தானாம்வேனிற்காலத்தில் ஆறாம்பட்சத்துப் பஞ்சமி நாளில் மன்னரே நீரை ஊற்றி அநாவது தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறான்.
பார்ப்பனியத்தின் செல்வாக்கைப் பல்லவமன்னன் எப்படி எல்லாம் செய்கிறான் பாருங்கள்.

தானமாகக் கொடுத்த விரிபுரம் கிராமத்திற்குப் பிரமதேயத்திற்கான அனைத்து விலக்குகளும் அளித்திருப்பதை இந்தப் பட்டயம் தான்யகேட அதிகாரிக்கு இந்தப் பட்டயம் அறிவிக்கிறது. அதாவது இக்கால அரசு ஆணை (G.O) போல. வேறுபாடு செப்பேட்டில் அளிக்கப்படுகிறது.

விலக்களிக்கப்பட்ட இந்த ஊருக்குள் படைவீரர்கள் நுழையக்கூடாது.
ஊருக்குள் வரும் அரசு அலுவலர் களுக்குச் சோறுவிறகுதண்ணீர்கட்டில் தங்குமிடம் ஆகியவற்றை ஊரார் தரவேண்டியதில்லை.
அதிகாரிகளால் இவ்வூருக்கு எவ்விதச் சேதாரமும் ஏற்படக்கூடாது.
உப்பிற்காக இவ்வூரில் குழி தோண்டக்கூடாது. பார்ப்பனர்களுக்குச் சலுகைகள் இவை. இவ்வாறான சலுகைகள் ஏராளம்.
இந்த விலக்குகளைத் தர மறுக்கும் அரசு அலுவலர்களுக்கும்பிரம்மதேய ஊரில் உள்ளவர்களுக்கும்தொல்லை தரும் அதிகாரிகளுக்கும் அரசரே சரீர தண்டனை வழங்குவார் என்று செப்பேடு எச்சரிக்கிறது.
ஹீரஹடஹள்ளிச் செப்பேடு
இது செப்பேடு முதலாம் சிவஸ்கந்தவர்மன் மகாராஜாவாக ஆனதும் வழங்கிய செப்பேடு. மயிதவோலு இளவரசராய் இருந்த போது வழங்கியது. ஹீரஹடஹள்ளிச் செப்பேடு அவர் மகாராஜாவாக இருந்தபோது வழங்கியது.

அதில் பார்ப்பனருக்கு சில்லரேகக் கொடுங்கை ஊர்அவர்களுக்கு உரிய நிலப்பங்கு செப்பேட்டில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ள. சிவஸ்கந்தவர்மனின் முன்னோரான பப்பசுவாமி என்பவரிடம் தானமாகப் பெற்ற அந்தணர்கள் எண்ணிக்கை இருபத்திரண்டு ஆகும். சில்லரேகக் கொடுங்கை என்ற தானம் கொடுத்த சாதாஹளி மாவட்டத்தில் (தமிழகத்தில் அல்ல) இருந்தது.

பார்ப்பனர்களுக்குத் தானமாக அளிக்கப்பட்ட பிரம்மதேயமான இத்தகு கிராமங்களுக்கு 18 வகை விலக்குகள் அளித்துள்ளனர். மயிதவோலுவில் இடம்பெறாத சலுகைகளான அதிகாரிகளுக்குப் பால்தயிர் தரவும் வேண்டாம்காய்கறிகீரைமலர்கள் அளிக்கவேண்டாம்கள் இறக்கக் கூடாது ஆகியன இடம்பெற்றுள்ளன.
பார்ப்பனர்களின் அக்கிரகாரம்பார்ப்பனச்சேரி எப்படி உருவாகிறது பாருங்கள். சில்லரேகக் கொடுங்கையில் தோட்ட நிலத்தைத் தானமாகப் பெற்ற பார்ப்பனர்கள் தாங்கள் வாழும் கிராமமான ஆபிட்டியில் நெல்லடிக்கும் களம் அமைத்துக்கொள்வதற்கென நிலம்குடியிருப்பு மனைக்கொத்தளி நிலமும் பெற்றனர். பாதிக்கூலி தந்தால் போதுமானது எனும் திட்டத்துடன் நான்கு கூலியாள்களையும் இப்பார்ப்பனருக்கு சிவஸ்கந்தவர்மன் கொடுத்திருக்கிறான். அது மட்டுமல்லஇந்தப் பார்ப்பனர்களுக்கு ஆடை நெய்து தர வாய்ப்பாக தறிநெய்வோர் இரண்டுபேர் அளிக்கப்பட்டனர்.
இத்துடன் நிற்கவில்லை. தாம் அளித்த இந்தத் தானத்தை எதிர்கால அரசர்கள்அவர்களுடைய வாரிசுகள் வேறு மரபினராயினும் காத்துத் தரவேண்டும் என்று கைகூப்பி வேண்டியிருக்கிறான். அதாவது பார்ப்பனர்களுக்குக் கொடுத்ததைப்பாதுகாக்க வேண்டுமாம்
அவ்வாறு காத்துத் தராதவர்மனிதரில் களஉயராய் பஞ்சமாபாதகங்களின் தோஷத்தை அடைவார்கள் என்று சாபம் வேறு. இன்னும் இருக்கிறது.
இந்தப் பட்டயத்தை எழுதியவன் அரசரின் அந்தரங்கச் செயலாளரான பட்டி சம்மன் என்ற பார்ப்பான் ஆவான்.
இவ்வாறு பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்ததே மன்னனின் மூடநம்பிக்கைகதான். இந்தப் பட்டயம் சிவஸ்கந்தவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டில் மழைக்காலத்தில் ஆறாம் பட்சத்தின் பஞ்சமி நாளில் வழங்கப்பட்டது. என்றும் கூறப்பட்டுள்ளது.
சிவஸ்கந்தவர்மனின் ஆட்சி. நூறாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும் என்றும் சந்திரன்நட்சத்திரங்கள்சூரியன் உள்ள காலம்வரை நிலைத்திருக்க வேண்டும் என்று மன்னரே வழங்கியபட்டயம். ஆணத்தி யாக இருந்து நிறைவேற்றிய பட்டயம் அதாவது முன்னின்று  வழங்கிய இது.
செப்பேட்டில் யாரேனும் ஒருவன்தான் அரசனுக்குப் பிரியமானவன் என்ற மதத்தால் (ஆணவத்தால்) இந்த தர்மத்துக்குக் கொடுமையோ தீமையோ செய்தாலும்தொல்லை அளித்தாலும் அவனை நாம் நிச்சயம் தடுப்போம் என்று எச்சரிக்கைகள் வேறு.
பார்ப்பனியத்துக்கு ஏன் இந்த உயர்வு என்று பொங்கிய பகுத்தறிவாளர்கள் அன்றும் இருந்திருக்கின்றனர் போலும்.
யார் ஆட்சி வந்தாலும் பார்ப்பனியம் சாதித்துக் கொள்கிறதே என்று வருந்தியவர்கள் அன்றும் இருந்திருக்கிறார்கள். அன்றும் பெரிய இடத்துத் தொடர்புள்ள துணிவில் தவறு செய்யும் போக்குகளும் இருந்துள்ளன. எப்படியோ பார்ப்பனியம் தன் ஆதிக்கக் கொடியை நாட்டி ஆள்வோரை மயக்கி விடுகிறது என்று தோன்றுகிறது.
இவ்வாறு தொடக்ககாலப் பல்லவர்களால் வழங்கப்பட்ட மூன்று பிராகிருதச் செப்பேடுகளும் அரச மரபினர் அறிந்த தானங்களுக்கான ஆவணங்களாகும்.
பல்லவர் செப்பேடுகள் முப்பது எனும் நூலில் இந்தச் செப்பேடுகளின் பிராகிருத மொழி வாசகங்களையும்தமிழ் மொழி பெயர்ப்புக் குறித்தும் காணலாம்.
பல்லவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் இதே போல் பார்ப்பனியத்தை ஆதரித்தனர். அதனால்தான் தமிழன் இராஜராஜன் தான் கட்டிய கோயிலுக்கு வடநாட்டில் இருந்து ஈசான சிவாச்சாரியாரை அழைத்துக் குடமுழுக்குச் செய்தான். அவன் மகன் ராஜேந்திர சோழனும் பார்ப்பனீயத்தைத் தோள் கொடுத்து உயர்த்-தினான் என்பது பகுத்தறிவாளர் காணும் குறைபாடு.
- தமிழகத்தில் ஆரியப் பண்பாட்டைப் புகுத்திய 
பல்லவ மன்னர்கள்,செப்பேடுகள் கூறும் உண்மைகள்
என்னும் தலைப்பில் எழுதி,
விடுதலை ஞாயிறு மலரில் (30-10-2010)வெளிவந்த கட்டுரை 





Sunday 24 October 2010

எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி

இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு

மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிருந்தது. 1883 ஆம் ஆண்டு ராஜா அவர்கள் மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.

சிலர் குறிப்பிடுவதுபோல், அவர் செயின்ட் தாமஸ் மவுன்டில் பிறக்கவில்லை. மயிலாப்பூரில் அல்லது அந்நாளில் மயிலாப்பூருடன் சேர்ந்திருந்த ராயப்பேட்டையில் பிறந்து, பின்னர் செயின்ட் தாமஸ் பகுதிக்குக் குடியேறினார். ராஜா அவர்களின் தந்தை சின்னத்தம்பி பிள்ளை ஏழ்மையான தாழ்த்தப்பட்ட வகுப்பினர். லாரன்ஸ் அசைலத்தில் மேனேஜராகப் பணியாற்றியவர். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் உயர்நிலைப்பள்ளியில், வெஸ்லி கல்லூரியில் பயின்று சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.
அரசியலில் பங்கேற்று செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட் போர்டு எனப்படும் செங்கல்பட்டு மாவட்டக் கழகத் தலைவரானார். ராஜா அவர்களை 1916 இல் ஆதிதிராவிட மகாஜன சபை செயலாளராக இருந்த வரை ஈர்த்தது நீதிக்கட்சிதான். சென்னை சட்டமன்றத்திற்கு 1920 இல் தேர்தல் நடைபெற்றபோது முதல் தேர்தலில் 1920 நவம்பரில் நீதிக்கட்சி வேட்பாளராக நின்றுதான் சட்டமன்றம் சென்றார். நீதிக் கட்சியின் துணைத் தலைவராக சட்ட மன்றத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சென்னை சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த்தப்பட்டவர் எம்.சி. ராஜாதான். அதுவும் தேர்ந்தெடுத்தது நீதிக்கட்சிதான். இதையெல்லாம் மறைத்து விடுகிறார்கள்.
1922 இல் தாழ்த்தப்பட்ட சகோதரர்களைப் பறையன், பஞ்சமன் என அழைத்ததை மாற்றி ஆதிதிராவிடர், ஆதி சூத்திரர் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை ஏற்று நிறைவேற்றி யது நீதிக்கட்சிதான். 1921-க்குப் பிறகு 1923 இல் நீதிக்கட்சியிலிருந்து வெளியேறித் தனி வழி காணவேண்டும்; தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டும் என்று நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதைவிட தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டுமென்று அனைத்து இந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பினை 1928 இல் உருவாக்கி, அதன் தலைவரானார். 1926 முதல் 1937 வரை டில்லி சட்டப்பேரவையில் விளங்கினார். 1937 இல் ஏற்பட்ட கூர்மா வெங்கட்டரெட்டி நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) அமைச்சரவையில் சென்னை மாநில வளர்ச்சித் துறை அமைச்சரானார்.
ஆனால், எம்.சி. ராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் இரண்டு சறுக்கல்கள். ஒன்று, நீதிக்கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இணைந்து பணியாற்றிய எம்.சி. ராஜா, குறுகிய காலத்தில் சட்டமன்ற உறுப்பினர், துணைத் தலைவர் பதவிகளைப் பெற்ற எம்.சி. ராஜா, நீதிக்கட்சியையும், தியாகராயரையும் விமர்சித்தார்.

எம்.சி.ராஜா
இரண்டாவது, அம்பேத்கரின் வழிக்கு மாறுபட்ட சறுக்கல். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தனி நியமனாக இல்லாமல், தனி ஒதுக்கீடாக மாற வேண்டும் என்று 1927 இல் மத்திய சட்டசபையில் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு, 1928 இல் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவின் அறிக்கைகள் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகள் ராஜாவின் அறிக்கையின் தொடர்ச்சி என்பவர்கள் அம்பேத்கரின் எண்ணம், செயலுக்கு எதிராகச் சென்ற மாபெரும் துரோகத்தை எப்படி மன்னிக்கிறார்கள் என்பது வரலாற்றாசிரியர்கள் வியக்கின்ற ஒன்று.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு வலதுசாரிகளான டாக்டர் பி.எஸ். மூஞ்சேயுடன், ஜாதவுடன் உடன்பாடு மேற்கொண்டார். ராஜா கொடுத்த ஆதரவிற்காக மூஞ்சே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அனைத்து இந்திய அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தொகுதிக்காகப் போராடி வந்த வேளையில், தாழ்த்தப்பட்டோர் தலைவராக ஆன எம்.சி. ராஜா மேற்கொண்டது சறுக்கல் என்பதை விடத் துரோகம் என்று சொல்லலாம்.

பெரியாரும் அம்பேத்கரும்
எனவேதான், அதாவது அம்பேத்கருக்குச் செய்த துரோகத்தினால் தான், புனேயில் செய்துகொண்ட ஒப் பந்தத்தின் விளைவாகத்தான் அவருடைய முந்தைய செயல்கள் மதிப்பிழந்து போயின. எனவேதான், சுயமரியாதை இயக்கம் ராஜாவைக் கடுமையாக விமரிசனம் செய்தது.
இங்கே ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்; நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் இணைந்து பணியாற்றிய, நீதிக்கட்சியிலிருந்து வெளியேறி நீதிக்கட்சியையும், தியாகராயரையும் விமரிசிக்கப்பட்ட காலத்தில் கடுமையாக விமரிசனம் செய்யவில்லை.
ஆனால், எப்போது - 1932 இல் அம்பேத்கர் செயல், எண்ணங்களுக்கு மாறாக, அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் - இரட்டைமலை சீனிவாசனே எங்கள் பிரதிநிதி - காந்தியை நம்பாதீர்கள் என் றாரோ அந்த ராஜா, தலித்களுக்குத் தனித் தொகுதி என்ற உயிரான கொள்கையைப் பலி கொடுத்து மூஞ்சேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதுதான் அவருடைய வாழ்க்கையின் கரும்புள்ளி.

சமீபத்தில் பெருந்தலைவர் எம்.சி. ராஜா சிந்தனைகள் தொகுதி ஒன்று வே. அலெக்ஸ் தொகுத்து, தமிழில் ஆ. சுந்தரம் மொழி பெயர்த்த நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் 1930 இல் ஜே. சிவசண்முகம் பிள்ளை எழுதிய, இண்டியா பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட The Life Select writings and Speeches of Rao Bahadur M.C. Raja வின் வாழ்க்கை, 1927 இல் எம்.சி. ராஜா அவர்கள் எழுதி வெளியிட்ட ஆங்கில நூலினைச் சென்னை சேத்துப்பட்டுக் கூடம், ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் தலைப்பில் வெளியிட்டது. அத்துடன் 1923 ஆம் ஆண்டு ஜூலை 21, 22 ஆகிய நாள்களில் கோவில்பட்டியில் ஆதிதிராவிடர் பேரவையில் ராஜா அவர்கள் பேசிய உரை ஆகியவற்றையும் இணைத்து இந்நூல் வெளிவந்துள்ளது.
இந்த உரைகளில் நீதிக்கட்சியைக் கடுமையாக விமரிசித்துள்ளார். ஆனால், தந்தை பெரியாரும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி, எம்.சி. ராஜாவிற்கு அந்தக் காலங்களிலேயே தக்க பதிலை முறையாக அவர் மறுக்கவியலாதவாறு அளித்துள்ளன. குடிஅரசு வெளியிடும் தொகுதிகளில், அன்றைய நாள் குடிஅரசு படிக்க இயலாதவர்களுக்கு இன்று திராவிடர் கழகம் வெளியிட்டு அரிய சேவை செய்கிறது.

இந்த நூலைக் குறித்து அக்டோபர் 27, 2010 இந்தியா டுடே தமிழ் ஏட்டில் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலித் ஆளுமை என்னும் தலைப்பில், அந்நூலை விமரிசனம் செய்துள்ள விமரிசகர் தலைப்பிலேயே நீதிக்கட்சியின் தவறுகளை விமரிசனம் செய்ததால் இருட்டடிப்பு செய்யப்பட்ட எம்.சி. ராஜாவின் எழுத்துகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று ஏதோ இப்போதுதான் இவை வெளிவந்தது போன்ற மாயையை உருவாக்கி உள்ளதைக் காண்கிறோம்

நாம் மேலே குறிப்பிட்டவாறு 1927 இல் எழுதிய நூலைச் சேத்துப்பட்டுக்கூடம் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் பெயரில் தமிழாக்கித் தன் மூன்றாவது வெளியீடாக 2006-லேயே வெளியிட் டுள்ளது. ஏற்கெனவே ஜே.சிவசண்முகம் பிள்ளை வெளியிட்டுள்ள நூல், சென்னை சட்டப்பேரவையில் 26 அக்டோபர் 1939 இல் எம்.சி. ராஜா பேசிய பேச்சுகள் ஆகியன அச்சில் வெளிவந்துள்ளன.

ராஜா அவர்கள் ஆகஸ்ட் 20, 1943 இல் இறந்தார். அவர் இறந்த பின் அல்ல, அவருடைய காலத்திலேயே வெளிவந்துள்ளன. இறந்த பின்னரும் வெளிவந்துள்ளன.
உண்மை இவ்வாறு இருக்கையில், பெரியாரைப்பற்றி அவதூறு பேசுவதில், கொச்சைப்படுத்துவதில் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் சிலரும் சுகம் காணுகின்றனர் என்றே தோன்றுகிறது.

தந்தை பெரியாரின் வாழ்க்கை திறந்த புத்தகம். ஒளிவு மறைவு இல்லாதது. பூனா ஒப்பந்தத்தில் தான் செயல்பட்ட விதம் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என்று எம்.சி. ராஜா பின்னாளில் கருதியதாக காம்டே எனும் ஆய்வாளர் பதிவு செய் துள்ளதாக நூல் மதிப்பீட்டாளரே எழுதி யுள்ளார்.
ஆனால், தந்தை பெரியாரைப் பொருத்தவரையில் சருக்கலோ, தவறுகளோ கிடையாது. 1947 இல் இந்திய விடுதலை குறித்து அவர் கொண்ட கருத்து, 1950 இல் குடிஅரசு கொண்ட கருத்து தெளிவானதாகவும், சரியான தாகவும் இருப்பதை 63 ஆண்டுகளுக்குப் பின்னும் மெய்ப்பிக்கப்படுகிறது.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் சுயமரியாதை இயக்கம் செயல்படுத்திய திட்டங்களில் உண்மை இல்லை. வகுப்புவாத ஏகாதிபத்தியமும், ஜாதியின் கொடுங்கோன்மையுமே என்று ராஜா தவறாகக் கணித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் 126 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் பயணங்கள் என்றும் முடிவதில்லை - பாதைகளும் எப்போதும் தவறுவதில்லை என்று எழுதியவற்றை நினைவுபடுத்திக்கொள்வது நல்லது.
தமிழர் தலைவர் குறிப்பிட்டார், கொள்கைகள் நமக்கு அடிப்படையானவை; அத்துபடியானவை. அவைகளைப் பாதுகாப்பதும், பரப்புவதும், திரிபுவாத விஷமத்தன விமர்சனங்களின் விலாவை ஒடிப்பதும்தான் நம் முன் உள்ள ஒரே பணி.
இந்தச் சிந்தனையோடுதான் இந்தியா டுடே விஷம விமர்சனத்திற்கு இங்கே பதிலளித்தோம்.
தந்தை பெரியார் தொடங்கியது கட்சி அல்ல - இயக்கம். அவர்களின் அரசியல் பதவிகள், புகழ் பெருமைகள், பாராட்டுகள் இவைகளைத் துறந்த அப்பழுக்கற்ற தூய செயல்பாடுகளே மக்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கும். அவர்தம் நன்றி பாராட்டாத பணிகளே தொண்டறமாய் அமைந்தன. பகுத்தறிவும், மனிதநேயமும் தான் அதன் வழிமுறையும் இலக்குமாக அமைக்கப் பட்டுள்ளன.
இவைதான் இன்றும், அன்றும், என்றும் தமிழர் தலைவர் குறிப்பிட்டது போல் சுயமரியாதை இயக்கம்பற்றிய உண்மைகள்.
கடவுள், மதம், ஜாதி, மொழி, நாடு என்ற எந்தப் பற்றும் இல்லாதவனாக என்னை ஆக்கிக் கொண்டு அறிவுப் பற்று, மனிதப் பற்று மட்டுமே கொண்டவனாக அந்தப் பார்வையிலேயே எதையும் பார்த்துப் பணிபுரிபவன் என்ற தந்தை பெரியாரின் விளக்கம் வீண் அபவாதங்களுக்குப் பதிலாக அமையும்.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் எந்தக் காரியமானாலும், காரணகாரியமறிந்து செய். சரியா, தப்பா என்பதை அந்தக் காரணகாரிய அறிவிற்கும், ஆராய்ச்சிக்கும் விட்டுவிட்டு, எந்த நிர்ப்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு என்றது.
மனிதன் சரி என்று கருதிய எண்ணங்களுக்கும், இழப்புகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. இன்றைய சுதந்திரவாதிகள் சுயமரியாதையை அலட்சியம் செய்கிறார்கள். இது உண்மையிலேயே மூடவாதம் என்று சொல்வோம். சுயமரியாதை அற்றவர்களுக்கே சுதந்திரம் பயனளிக்காது என்பதுதான் சரியான வார்த்தையாகும் என்று குறிப்பிட்ட பெரியார் கருத்து சரியானதாகவே இன்றும் இருக்கிறது.
எனவே, எம்.சி. ராஜாவின் எழுத்துகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் பெரியாரைக் குறை கூறுவதோ, கொச்சைப்படுத்துவதோ, உண்மையான சுய சிந்தனையாளர் பெரியாரை இழிவுபடுத்துவதோ முறையாகாது. இதுபோல் சேற்றை வாரி வீசும் பணியைத் தொடராமல் இருப்பது நல்லது.
எம்.சி. ராஜா இன்று இருந்தால், 117 வயதுக் கிழவராக, எப்படி மூஞ்சேயுடன் உடன்பாடு கண்டதற்கு வருந்தினாரோ, அதுபோல் சுயமரியாதை இயக்கம் குறித்துத் தவறாகக் கணித்ததற்கும் வருத்தம் தெரிவித்திருப்பார்.
தந்தை பெரியார் தொடர்ந்து வகுப்புரிமையை வலியுறுத்தினார் - போராடினார். 3.12.1950 திருச்சி வகுப்புரிமை மாநாட்டில் டாக்டர் நாயர் பந்தலில், எம். ரத்னசாமி தலைமையில், இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவர் தந்தை பெரியார்.
சென்னை சர்க்காரில் உள்ளது போலவே, மத்திய சர்க்காரிலும் உத்தியோகங்களை வழங்குவதில் வகுப்புவாரி முறை அமல் நடத்தப்படவேண்டும் என இம்மாநாடு கோருகிறது. வேலை அளிப்பதில் மட்டுமன்றி, வேலை உயர்வு தரும்போதும் இந்தக் கொள்கையே பின்பற்ற வேண்டுமென இந்த மாநாடு தீர்மானிக்கிறது.
1950 இல் தந்தை பெரியார் போட்ட தீர்மானம் 2002 இல் அரசியல் சட்டத்தின் 85 ஆவது திருத்தமாக அரசியல் சட்ட 16 ஆவது பிரிவு திருத்தம் வாயிலாக நிறைவேறியது. 1982 இல் தந்தை பெரியார், கழகத் தலைவர் அம்மா அவர்கள் மறைந்த பிறகும், 1.1.1982 இல் மதுரை ரீகல் திரையரங்கில் நடைபெற்ற மதுரை திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் இது.
வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் இட ஒதுக்கீட்டினை அரசுத் துறையில் மட்டுமன்றி, தனியார் துறை, கூட்டுத் துறை ஆகிய துறைகளிலும் அமல்படுத்த அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.
அய்யா கடைசிவரை வலியுறுத்தியது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை. அதுமட்டுமல்லாது, தீண்டாமை, ஜாதி ஒழிப்பு என்பதை நடைமுறைப்படுத்தவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று வலியுறுத்தினார். கலைஞர் அரசுதான் அதனை நிறைவேற்றி அய்யாவின் நெஞ்சில் வடிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்தது.
தாழ்த்தப்பட்டவர் நலனில் தந்தை பெரியார் காலத்தும் சரி, அதன் பின்னும் சரி இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல், இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு என்று பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் திராவிடர் கழகம்தான்.
பெரியாரின் பெரும் பணிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெரும் பணி செயலூக்கம் கொண்ட சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. விளம்பரங்கள் இல்லாமல், பதிவுகள் இல்லாமல் பெரியாரால், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆற்றியுள்ள சாதனைகள் ஏராளம். அளவிட முடியாதது.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்று சொல்வோம். அன்றும், இன்றும், என்றும் உங்களைப்பற்றி உங்களுக்கு நேர்ந்த, நேர்ந்துவரும் இழிவு குறித்து, உங்களுக்கு இழைக்கப்படும் ஜாதிக் கொடுமைகள், ஜாதி வக்கிரங்களை எடுத்துக் கூறிவரும் இயக்கம் திராவிடர் கழகம். ஒரு விடுதலை என்பது மறக்கவோ, மறைக்கவோ முடியாதது. ஏதோ எம்.சி. ராஜாவைத் திட்டமிட்டு மறைத்துவிட்டதுபோல வதந்தி பொய்ப் பிரச்சாரங்கள் இதோடு நிற்கட்டும்.
திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை அவர்கள் குறிப்பிட்டதுபோல்,
அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்பதை அய்யா நம்பவில்லை. ஜாதிகள் இருக்கும்வரை தீண்டாமையை ஒழிப்பது குதிரைக் கொம்பேயாகும். அதுவே ஜாதி ஒழிக்கப்பட்டது என்று சொன்னால்தான் இந்தியாவிற்கே விடிவு காலம் என்றார். நீதிமன்றத்திலும் ஒதுக்கீடு கேட்கும் இயக்கம் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம், தமிழர் தலைவர் தலைமையிலான திராவிடர் கழகம்.
எம்.சி. ராஜவைப் பற்றி எழுதுவது ஆனாலும் சரி, தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றி எழுதுவதானாலும் சரி, அங்கே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் ஆற்றிய தொண்டுகளை வேண்டுமென்றே, மிகச் சிறு குழுவினர் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மறைக்கப் பார்க்கிறார்கள். பொய்யைப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். இதற்காகவே நம்முடைய எதிரிகளின் கையாள்களாக இவர்கள் மாறிப்போய் இருக்கிறார்கள். இதனால் இரண்டுவித ஆதாயங்கள் அவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கின்றன. (1) நல்ல விளம்பரம் (2) பூணூல் திருமேனிகளோடு நெருங்கிய தொடர்பு - அதன்மூலம் கிடைக்கிற சலுகைகள். இதனாலேயே பெரியாரைத் தாக்குகிறார்கள். பிழைக்கிறார்கள் என்று சங்கொலி பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு பொருத்தமாக முன்பு எழுதியது நினைவிற்கு வருகிறது. 
சங்கராச்சாரியாருடன் சமரசம்
எம்.சி. ராஜா 1930-களில் சங்கராச்சாரியுடன் சமரசம் செய்துகொண்டு, அவரைப் பணிந்து போற்றியதுண்டு. பெரியாரோ, அண்ணல் அம்பேத்கரோ என்றேனும் அவ்வாறு செய்ததுண்டா? சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைகளுக்கு மாறாகச் செல்வோர், கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களைத் தாழ்த்துவதோ, இருட்டடிப்புச் செய்வதோ நோக்கம் அல்ல.
எனினும் சிலர் கேட்கலாம். யாரோ இந்தியா டுடேயில் எழுதி விட்டார்கள் என்பதற்கு இவ்வளவு விளக்கமா? என்று.
அவர்களுக்கு நாம் சொல்லும் பதில்:
நாம் இத்தகைய பொய்க்கூற்றுகளுக்கும், பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பதில் அளிக்கத் தவறிவிட்டால், இப்போதையை வழித் தோன்றல்கள், எதிரிகளின் கூற்று உண்மை என்று எண்ணி விடுவார்கள். எனவே, விளக்கம் அளித்தால் எதிர்காலம் சரியாக மதிப்பிடும்.
நன்றி:விடுதலை 22,23.10.2010